தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தில் 2 மாதங்களில் 15 கோடி பேர் பங்கேற்பு

Posted On: 17 JAN 2024 2:42PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் இரண்டே மாதங்களில் 15 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணம் என்பது நாடு முழுவதும் அரசுத் திட்டங்கள் 100% அளவிற்கு நிறைவேற்றப்படுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பயணம் தொடங்கப்பட்ட பின்னர் மக்களின் பங்கேற்பு எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்தது. 2023 டிசம்பர் 13, அன்று 4 வது வாரத்தின் முடிவில் இப்பயணம் 2.06 கோடி மக்களைச் சென்றடைந்த நிலையில், 2023, டிசம்பர் 22-க்குள் 5 வாரத்தில் இந்த எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்தது. அடுத்த நான்கு வாரங்களில், இப்பயணம் 10 கோடி பங்கேற்பாளர்களை ஈர்த்தது.   பின்னர் இது 15 கோடி பங்கேற்பாளர்களைக் கடந்தது. ஜனவரி 17-ம் தேதி நிலவரப்படி, 2.21 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 9,541 நகர்ப்புறங்களை உள்ளடக்கிய வளர்ச்சியடைந்த பாரதம் லட்சியப் பயணத்தில் 15.34 கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டம், நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குச் செல்லும் தகவல், கல்வி, தொடர்பு (ஐஇசி) வாகனங்கள் மூலம் தகுதியான ஒவ்வொரு நபரையும் நலத்திட்டங்களுடன் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம், அரசுத் திட்டங்கள், நீடித்த வேளாண்மை, நிலையான விவசாயம், குறைந்த கட்டண சிகிச்சை, சுகாதாரம், நிதி குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது.

2023, ஜனவரி 17, நிலவரப்படி, 4 கோடிக்கும் அதிகமான மக்கள் சுகாதார முகாம்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். மை பாரத் இணையதளத்தில் 38 லட்சத்துக்கும் அதிகமான பதிவுகள் உள்ளன. அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக 2 கோடிக்கும்அதிகமான ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த யாத்திரை இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கியதாகும்.

1 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் 100 சதவீதம் அளவுக்கு ஆயுஷ்மான் சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது லட்சக்கணக்கான மக்களுக்கு சுகாதார வசதியை ஏற்படுத்தித் தரவுள்ளது. 'இல்லந்தோறும் குடிநீர்' திட்டத்தின் மூலம் தூய்மையான நீர் இப்போது 79,000-க்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துகளை சென்றடைகிறது. அதே நேரத்தில் 1.38 லட்சத்துக்கும் அதிகமான கிராமப் பஞ்சாயத்துகளில் 100 சதவீத நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பது வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை எளிதாக்குகிறது. மேலும், 17,000-க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை அடைந்துள்ளன. இது தூய்மையான வாழ்க்கைக்கு ஒரு சான்றாகும்.

----

(Release ID: 1996884)

ANU/SMB/IR/KPG/KRS



(Release ID: 1997004) Visitor Counter : 98