பிரதமர் அலுவலகம்
திரு. லால்துஹோமா மற்றும் அவரது கட்சியான சோரம் மக்கள் இயக்கத்திற்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
04 DEC 2023 8:10PM by PIB Chennai
மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக திரு. லால்துஹோமா மற்றும் அவரது கட்சியான சோரம் மக்கள் இயக்கத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மிசோரம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக திரு. மோடி உறுதியளித்தார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
"மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சோரம் மக்கள் இயக்கம் மற்றும் திரு லால்துஹோமாவுக்கு வாழ்த்துக்கள். மிசோரமின் முன்னேற்றத்தை மேலும் மேம்படுத்துவதில் சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க நான் உறுதியளிக்கிறேன்.”
----------
ANU/AD/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1984767)
வருகையாளர் எண்ணிக்கை : 109
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam