பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காவலர் வீர வணக்க தினத்தன்று காவல்துறையினரின் அயராத அர்ப்பணிப்புக்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 21 OCT 2023 8:22AM by PIB Chennai

காவலர் வீர வணக்க தினமான இன்று, காவலர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி பதிவிட்டுள்ளதாவது:

“காவலர் வீர வணக்க தினத்தில், நமது காவல்துறையினரின் அயராத அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறோம். அவர்கள், பெரும் ஆதரவின் தூண்களாக, சவால்களைக் கடந்து, குடிமக்களை வழிநடத்துவதுடன், பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள். சேவையில் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, உண்மையான வீர உணர்வை பிரதிபலிக்கிறது. உயரிய தியாகம் செய்த அனைத்து காவலர்களுக்கும் மனமார்ந்த அஞ்சலி.”

***

ANU/PKV/RB/DL


(रिलीज़ आईडी: 1969658) आगंतुक पटल : 134
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam