பிரதமர் அலுவலகம்

சத்ரபதி சம்பாஜிநகரில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு

Posted On: 15 OCT 2023 9:31AM by PIB Chennai

மஹாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் பிரார்த்தனை  செய்துள்ளார்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

“சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குதலா ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”

***

ANU/AD/RB/DL



(Release ID: 1967840) Visitor Counter : 77