பிரதமர் அலுவலகம்

இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிர்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்


கடினமான நேரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கிறது: பிரதமர்

Posted On: 07 OCT 2023 5:27PM by PIB Chennai

இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.  இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் இந்தியா ஒற்றுமையாக துணை நிற்கிறது என்றும், எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

"இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் ஒற்றுமையாக இணைந்து துணை நிற்கிறோம்."

***

ANU/PKV/BS/DL



(Release ID: 1965515) Visitor Counter : 75