பிரதமர் அலுவலகம்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2022-ல் ஆர்எஸ்:எக்ஸ் ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஈபாத் அலிக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

Posted On: 26 SEP 2023 4:20PM by PIB Chennai

ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆர்எஸ்:எக்ஸ் (பாய்மரப் படகுப் போட்டி) ஆண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக ஈபாத் அலியின் அற்புதமான செயல்திறனைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"பாய்மரப் படகுப் போட்டியில் ஈபாத் அலியின் அற்புதமான செயல்பாடு. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆர்எஸ்:எக்ஸ் ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று நமக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

நமது இளம் திறமையாளர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை வரது சாதனைகள் காட்டுகின்றன. அவருக்கு எனது நல்வாழ்த்துக்கள்".

***

(Release ID: 1960878)

ANU/AP/SMB/KV/KRS



(Release ID: 1961043) Visitor Counter : 94