பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரு என். விட்டல் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

இடுகை இடப்பட்ட நாள்: 03 AUG 2023 3:12PM by PIB Chennai

முன்னாள் குடிமைப் பணி அதிகாரி திரு என். விட்டல் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"பல்வேறு துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையை வளப்படுத்திய ஒரு சிறந்த குடிமைப் பணி அதிகாரியாக திரு என் விட்டல் ஜி நினைவுகூரப்படுவார். குஜராத்தில் பணி புரிந்த போது அம்மாநில வளர்ச்சிக்கு முக்கியப்  பங்காற்றினார். அவரது மறைவுச் செய்திக் கேட்டு வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி."

----

ANU/AD/IR/KPG/GK


(வெளியீட்டு அடையாள எண்: 1945549) வருகையாளர் எண்ணிக்கை : 183