பிரதமர் அலுவலகம்

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டதற்குப் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

Posted On: 01 JUN 2023 10:27AM by PIB Chennai

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 7 வேளாண் உபகரண வாடகை மையங்கள், சுய உதவிக் குழுக்களுக்கு 9 பசுமைக் குடில்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட தொடர்ச்சியான ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து பிரதமர் கூறியிருப்பதாவது:

“ஜம்மு காஷ்மீரின், குறிப்பாக முன்னேற விரும்பும் மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கிய நமது உறுதிப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக, ஏராளமான வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.”

***

 

SRI/BR/GK



(Release ID: 1928990) Visitor Counter : 125