பிரதமர் அலுவலகம்
அரா மின் தொகுப்பு துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை எளிதாக மாறும்: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
09 MAY 2023 9:57PM by PIB Chennai
பீகாரின் அராவில் மின் தொகுப்பு துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலம் அரா, போஜ்பூர், பக்ஸர் மற்றும் ரோடாஸ் மாவட்ட மக்களின் வாழ்க்கை எளிதாக மாறும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மத்திய மின்சார மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
எரிசக்தித் துறையில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கப் பணிகள் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல் பல்வேறு பயன்களும் மக்களுக்கு கிடைக்கும். இத்துடன் பீகாரின் அரா, போஜ்பூர், பக்ஸர் மற்றும் ரோடாஸ் மாவட்ட மக்களின் வாழ்க்கை எளிதானதாக மாறும்”.
***
SRI/ES/RR/RK
(வெளியீட்டு அடையாள எண்: 1923049)
வருகையாளர் எண்ணிக்கை : 212
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam