பிரதமர் அலுவலகம்

பிரபல வங்காள மொழி எழுத்தாளர் திரு சமரேஷ் மஜும்தரின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 08 MAY 2023 11:17PM by PIB Chennai

பிரபல வங்காள மொழி எழுத்தாளர் திரு சமரேஷ் மஜும்தரின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ட்விட்டர் வாயிலாக அவர் கூறியதாவது:

“வங்காள இலக்கியத்தில் அவர் அளித்த பங்களிப்பிற்காக திரு சமரேஷ் மஜும்தர் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். மேற்கு வங்கத்தின் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் வெவ்வேறு அம்சங்களை அவரது படைப்புகள் பிரதிபலிக்கின்றன. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”

***

AD/BR/KPG

 



(Release ID: 1922772) Visitor Counter : 133