பிரதமர் அலுவலகம்

கேரளாவில், மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 07 MAY 2023 11:16PM by PIB Chennai

கேரளாவில், மலப்புரம் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:

 

கேரளாவில் மலப்புரத்தில் படகு விபத்தில் ஏற்பட்ட  உயிரிழப்பு கவலை அளிக்கிறது. துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்."

***

(Release ID: 1922439)

SRI/IR/AG/RR



(Release ID: 1922488) Visitor Counter : 120