பிரதமர் அலுவலகம்

கேலோ இந்தியா முன்முயற்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் அதன் பங்களிப்பைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 22 APR 2023 7:49PM by PIB Chennai

கேலோ இந்தியா முன்முயற்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில் திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் அதன் பங்களிப்பைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது:

“5 ஆண்டுகளை நிறைவு செய்து, திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து, தடகள வீரர்களுக்கு சிறந்த தளத்தையும் உருவாக்கியுள்ள கேலோ இந்தியா முன்முயற்சிக்குப் பாராட்டுகள். இந்தியாவில் விளையாட்டுக்கு உகந்த சூழலை நமது அரசு தொடர்ந்து உருவாக்கும்.”

***

SMB/RB/DL



(Release ID: 1918962) Visitor Counter : 102