பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் உலகில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்த அனைவரையும் தேசிய கடல்சார் தினத்தில் பிரதமர் நினைவுகூர்ந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 05 APR 2023 2:28PM by PIB Chennai

துறைமுகம் சார்ந்த வளர்ச்சியில் இந்தியாவின் உறுதிப்பாட்டை தேசிய கடல்சார் தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவின் வளமையான கடல்சார் பாரம்பரியத்தால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ள நாம் பெருமைப்படுகிறோம். தேசிய கடல்சார் தினத்தன்று கடல்சார் உலகில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பு செய்த அனைவரையும் நாம் நினைவுகூர்ந்து, துறைமுகம் சார்ந்த வளர்ச்சி என்ற உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.”

***

AP/IR/AG/KPG

 


(வெளியீட்டு அடையாள எண்: 1913903) வருகையாளர் எண்ணிக்கை : 152