தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக திரு ராஜேஷ் மல்கோத்ரா பொறுப்பேற்றார்

Posted On: 01 MAR 2023 10:41AM by PIB Chennai

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மைத் தலைமை இயக்குநராக திரு ராஜேஷ் மல்கோத்ரா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.  திரு சத்யேந்திர பிரகாஷின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து திரு மல்கோத்ரா இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

1989-ம் ஆண்டுப் பிரிவு இந்திய தகவல் பணி (ஐஐஎஸ்) அதிகாரியான திரு ராஜேஷ் மல்கோத்ரா, 2018-ம் ஆண்டு முதல் நிதியமைச்சகத்தில் பொறுப்பு வகித்து வந்தார்.  கோவிட் பாதிப்பு காலத்தில் நிதியமைச்சகத்தின் பல்வேறு அறிவுப்புகள் மற்றும் தற்சார்பு இந்தியா திட்ட அறிவுப்புகளை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு கொண்டு செல்வதில் அவர் சிறப்பாக பங்காற்றினார்.

32 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடக மற்றும் தகவல் தொடர்பு திட்டமிடல் மற்றும் அமலாக்கப் பணிகளை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் அவர், சிறப்பாக மேற்கொண்டுள்ளார். நிதி, கம்பெனி விவகாரங்கள், விவசாயம், மின்சாரம், நிலக்கரி, சுரங்கம், தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, தொழிலாளர் நலன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அவர் பணியாற்றியுள்ளார்.  1996 முதல் 2017 வரை 21 ஆண்டுகள் தேர்தல் ஆணையத்துக்காகவும் அவர் சிறப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.  6 மக்களவைப் பொதுத்தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் உள்ளிட்டவற்றின் போது, தேர்தல் ஆணையம், ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு உத்திகளை மேற்கொள்வது தொடர்பான பணிகளை வகுத்து செயல்படுத்தியதில் திரு ராஜேஷ் மல்கோத்ரா முக்கியப் பங்காற்றியுள்ளார்.  இந்த காலகட்டத்தில் அவர் 12 தலைமைத் தேர்தல் ஆணையர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

காசியாபாத்தில் உள்ள மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனத்தில் முதுநிலை நிறுவனத்தில் வணிக மேலாண்மையில் முதுநிலை பட்டயப் படிப்பு ஹைதராபாதில் உள்ள தேசிய சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியில் ஊடக சட்டங்களில் முதுநிலைப் பட்டயப் படிப்பையும் அவர் முடித்துள்ளார்.  கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொதுக்கொள்கை ஆய்வு தொடர்பாகவும், இங்கிலாந்தில் உள்ள தாம்சன் ஃபவுண்டேஷனில் ஊடக மேலாண்மை மற்றும் உத்திகள் தொடர்பாகவும் குறுகிய காலப் படிப்புகளையும் அவர் முடித்துள்ளார்.  லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் நடத்திய சந்தைப்படுத்துதல் தொடர்பான கல்வித் திட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்திய கம்பெனி செயலாளர் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள அவர் சட்டப் படிப்பையும் முடித்துள்ளார்.  

ஒரு செய்தித் தொடர்பாளராக அரசுக்கும் ஊடகங்களுக்கும் இடையே தகவல் தொடர்பை வெற்றிகரமாக பரிமாறிக்கொள்வதில் திரு மல்கோத்ரா மிகச் சிறந்த அனுபவம் பெற்றவர் ஆவார். பல்வேறு அமைச்சகங்களால் கொடுக்கப்பட்டப் பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றியிருப்பதுடன் சிக்கலான சூழல்களை வெற்றிகரமாக அவர் கையாண்டுள்ளார்.  சரியான தகவல்கள் மட்டுமே ஊடகங்களுக்கு வழங்கப்படுவதை அவர் உறுதி செய்துள்ளார். பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பிலான பிரதிநிதிகள் குழுவில்  ஒருங்கிணைந்தப் பகுதியாக செல்பட்ட திரு ராஜேஷ் மல்கோத்ரா, அந்த அமைச்சகங்கள் சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வதில் பரந்த அனுபவம் பெற்றவர்.

 

***

 

AP/PLM/RJ/RR



(Release ID: 1903301) Visitor Counter : 190