பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய்க்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

Posted On: 28 FEB 2023 10:01AM by PIB Chennai

முன்னாள் பிரதமர் திரு மொரார்ஜி தேசாய்க்குப் புகழாரம் சூட்டியுள்ள பிரதமர்  திரு நரேந்திர மோடி, இவர் தலைசிறந்த நிர்வாகி என்றும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு இவரது பங்களிப்பு நினைவுகூரப்படும் என்றும் கூறியுள்ளார்.

ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“நமது முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு மரியாதை செலுத்துகிறேன். தலைசிறந்த நிர்வாகத்திற்காகவும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கான பங்களிப்புக்காகவும் இவர் நினைவுகூரப்படுவார். அவசர நிலையை எதிர்த்ததில் அவரது பங்களிப்பும், அதற்குப் பிந்தைய காலத்தில் தேசத்தை வழிநடத்தியதும் பாராட்டத்தக்கதாகும்.”

***

(Release ID: 1902932)

SM/SMB/AG/KRS



(Release ID: 1902989) Visitor Counter : 98