மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

மாற்றுத்திறனாளித் துறையில் ஒத்துழைப்புக்கான இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 15 FEB 2023 3:48PM by PIB Chennai

இந்தியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே மாற்றுத்திறனாளித் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மாற்றுத்திறனாளித் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டு முயற்சியை மேற்கொள்ள இந்தியா, தென்னாப்பிரிக்கா அரசுகளுக்கு . இடையே இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.  இது இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்தும். இருநாடுகளும் பரஸ்பரம் ஒப்புக் கொண்டதற்கு இணங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கால வரம்புக்குள் செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நவீன அறிவியல் ரீதியிலான நீண்டகாலம் நிலைத்து வரக்கூடிய செலவு குறைந்த உபகரணங்களை இரு நாடுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1899442

***

AP/PKV/AG/PK


(வெளியீட்டு அடையாள எண்: 1899456) வருகையாளர் எண்ணிக்கை : 224