பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டுப் பிரதமர் பாராட்டு

Posted On: 31 JAN 2023 7:46PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையானது, பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை பற்றி ஆழமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. சாதாரண மக்கள் எவ்வாறு அதிகாரம் பெற்றுள்ளனர் என்பதையும் வாழ்க்கை வசதிகள் எவ்வாறு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்துள்ளார். "

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

 

***



(Release ID: 1895179) Visitor Counter : 138