பிரதமர் அலுவலகம்

அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசிக்கு பிரதமர் அன்பான வரவேற்பு அளித்தார்

Posted On: 24 JAN 2023 8:26PM by PIB Chennai

எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி, அன்பான வரவேற்பு அளித்தார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி அழைப்பின் பேரில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி 2023 ஜனவரி 24 முதல் 26-ம் தேதி வரை, அரசு முறைப் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியாவிற்கு தமது இரண்டாவது அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிபர் சிசி, இந்தியாவின் 74-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்கிறார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

"அதிபர் அப்தெல் பத்தாஹ் எல்-சிசியை இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறோம். குடியரசு தின விழாவிற்கு தலைமை விருந்தினராக நீங்கள் இந்தியாவிற்கு வருகை தந்தது அனைத்து இந்தியர்களுக்கும் மகத்தான மகிழ்ச்சியைத் தருகிறது. நாளை நமது விவாதங்களை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

*****

(Release ID: 1893392)

SMB/CR/KRS



(Release ID: 1893545) Visitor Counter : 126