பிரதமர் அலுவலகம்

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

Posted On: 16 JAN 2023 10:28AM by PIB Chennai

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்கு புகழாரம் சூட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவுகூர்ந்துள்ளார். இளைஞர்கள் திருக்குறளை படிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது;

 

திருவள்ளுவர் தினத்தில், அறிவில் சிறந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன், அவரது உன்னதமான சிந்தனைகளை நினைவு கூர்கிறேன். பன்முகத்தன்மை கொண்ட  அவரது கருத்துக்கள், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரும் ஊக்கம் அளிக்கின்றன. இளைஞர்கள் அவசியம் திருக்குறளை படிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

***

(Release ID: 1891487)

SMB/AG/RR



(Release ID: 1891489) Visitor Counter : 168