பிரதமர் அலுவலகம்
கண் பார்வையற்றோருக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
17 DEC 2022 7:57PM by PIB Chennai
கண் பார்வையற்றோருக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் ட்விட்டர் பதிவைப் பகிர்ந்து ட்வீட் செய்துள்ள பிரதமர், “நமது வீரர்களால் இந்தியா பெருமிதம் அடைகிறது. கண் பார்வையற்றோருக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை நாம் வென்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. நம் அணி வீரர்களுக்கு பாராட்டுகள், அவர்களது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
SM/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1884514)
வருகையாளர் எண்ணிக்கை : 181
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam