பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எல்லைப் பாதுகாப்புப் படை தினத்தையொட்டி வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 01 DEC 2022 9:06AM by PIB Chennai

எல்லைப் பாதுகாப்புப் படை தினத்தை முன்னிட்டு அதன் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பாதுகாத்து, நமது தேசத்திற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்யும் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் சிறந்த சாதனைகளை பிரதமர் பாராட்டியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"அனைத்து @BSF_India வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை தின வாழ்த்துகள். பிஎஸ்எஃப் இந்தியாவைப் பாதுகாப்பதிலும், நமது தேசத்திற்கு மிகுந்த விடாமுயற்சியுடன் சேவை செய்வதிலும் சிறந்த சாதனைகளைப் படைத்துள்ளது.  இயற்கை பேரழிவுகள் போன்ற சவாலான சூழ்நிலைகளின் போது எல்லைப் பாதுகாப்புப் படையினரின் உன்னதப் பணிகளையும் நான் பாராட்டுகிறேன்."

**************

(Release ID: 1880126)

SRI/PKV/AG/RR


(रिलीज़ आईडी: 1880162) आगंतुक पटल : 186
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam