பிரதமர் அலுவலகம்

பீகார் மாநிலம் வைஷாலியில் விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதி அளிக்கப்படும் என்று அறிவிப்பு

Posted On: 20 NOV 2022 11:15PM by PIB Chennai

பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி தனது பிரார்த்தனைகளை தெரிவித்தார்.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்

பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:

பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து சோகத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000-மும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும்: பிரதமர் @narendramodi"

**************

(Release ID: 1877604)

Sri/RR



(Release ID: 1877622) Visitor Counter : 181