பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்டின் பவுரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 05 OCT 2022 9:07AM by PIB Chennai

உத்தராகண்டின் பவுரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர்  விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

உத்தராகண்டின் பவுரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு மனதை உருக்குகிறது. இந்த கோரமான தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்: பிரதமர் மோடி

•••••••••••••


(Release ID: 1865304)