பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் வதோதராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகை அறிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 04 OCT 2022 4:49PM by PIB Chennai

குஜராத் மாநிலம் வதோதராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப்  பிரதமர் திரு நரேந்திர மோடி வேதனையும், இரங்கலும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

“வதோதரா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன் . உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையாக வழங்கப்படும்."

*****


(रिलीज़ आईडी: 1865158) आगंतुक पटल : 181
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam