பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தின் பாந்தாவில் யமுனா நதியில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல்

Posted On: 11 AUG 2022 10:22PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் பாந்தா மாவட்டத்தில் யமுனா நதியில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமது அனுதாபங்களை தெரிவித்துள்ள திரு மோடி, மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ளூர் மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

“உத்தரப் பிரதேசத்தின் பாந்தாவில் யமுனை ஆற்றில் நேரிட்ட உயிரிழப்பு மனதை உருக்குகிறது. விபத்தில் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளூர் மாவட்ட நிர்வாகம்  தீவிரமாக மேற்கொண்டு வருகிறது: பிரதமர் @narendramodi”.

*****

 

(Release ID: 1851107)


(Release ID: 1851141)