பிரதமர் அலுவலகம்

காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சுதிருக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 05 AUG 2022 9:41AM by PIB Chennai

காமன்வெல்த் போட்டிகள் 2022-ல் ஆடவருக்கான பாரா பளுதூக்குதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சுதிருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 “காமன்வெல்த் போட்டிகள் 2022-ன் பாரா விளையாட்டுக்களுக்கு சுதிரின் பதக்கம் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளது. உயரிய தங்கப் பதக்கத்தை வென்று தமது உறுதித் தன்மையையும், அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். களத்தில் அவர் தொடர்ந்து சிறப்பாக செயலாற்றி வருகிறார். பாராட்டுகளோடு, அவரது எதிர்கால முயற்சிகள் அனைத்திற்கும் நல்வாழ்த்துகள்.”

***************

(Release ID: 1848574)



(Release ID: 1848600) Visitor Counter : 135