பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சுஷோவன் பந்தோபாத்யாய மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 26 JUL 2022 3:50PM by PIB Chennai

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் சுஷோவன் பந்தோபாத்யாய மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனையை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"டாக்டர் சுஷோவன் பந்தோபாத்யாய சிறந்த மனித நேயத்தை வெளிப்படுத்தினார். ஏராளமானவர்களை அன்பு மற்றும் கருணை உள்ளத்துடன் குணப்படுத்திய அவர், நீண்ட காலத்திற்கு நினைவு கூரப்படுவார். பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் அவருடன் நான் கலந்துரையாடல் நடத்தியதை நினைவு கூர்கிறேன். அவரது மறைவால் மிகுந்த வேதனை அடைந்த நான், அவரது குடும்பத்தினருக்கும், அனுதாபிகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி."

                                                                                                                                                                ***************

(Release ID: 1844956)


(रिलीज़ आईडी: 1844995) आगंतुक पटल : 179
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam