பிரதமர் அலுவலகம்
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் இனிதாக அமைய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் வாழ்த்து
Posted On:
25 JUL 2022 1:34PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் பதவிக்காலம் இனிதாக அமைய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவரது பதவிக்காலம் இந்தியாவுக்கு குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மக்கள், அடித்தள மக்கள் ஆகியோருக்கு வளர்ச்சிக்கான மாற்றத்தின் காலமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவை கொண்டாடும் காலத்தில் குடியரசுத் தலைவரின் பதவியேற்பு உரை இந்தியாவின் வளர்ச்சியை வலியுறுத்தியதோடு, தொலைநோக்கு பார்வையுடன் எதிர்காலத்தின் பாதையையும் காட்டியுள்ளது என்று அவர் கூறினார்.
பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இந்தியாவின் குடியரசுத் தலைவராக திருமதி திரௌபதி முர்மு அவர்கள் பதவியேற்றதை ஒட்டுமொத்த தேசமும் பெருமையுடன் பார்த்தது. இவர், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும் காலம் இந்தியாவுக்கு குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மக்கள், அடித்தள மக்கள் ஆகியோருக்கு வளர்ச்சிக்கான மாற்றத்தின் காலமாக இருக்கும். இவரது குடியரசுத் தலைவர் பதவிக்காலம் வெகு சிறப்புடன் இனிமையானதாக இருக்க நான் வாழ்த்துகிறேன்.”
“பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பின் தமது உரையில், நம்பிக்கை மற்றும் கருணையின் செய்தியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் வழங்கியிருக்கிறார். இந்தியா சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவை கொண்டாடும் காலத்தில் அவர், இந்தியாவின் வளர்ச்சியை வலியுறுத்தியிருப்பதோடு, தொலைநோக்கு பார்வையுடன் எதிர்காலத்தின் பாதையையும் காட்டியுள்ளார்.”
***************
(Release ID: 1844567)
(Release ID: 1844605)
Visitor Counter : 241
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam