பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் இரவு விருந்து அளித்தார்

Posted On: 22 JUL 2022 11:22PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரவு விருந்தளித்தார்.

இது பற்றி பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

“குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு இரவு விருந்தளித்தேன். திருமதி திரௌபதி முர்மு, திரு வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். அடிமட்ட அளவில் சாதனை புரிந்த ஏராளமானோர், பத்ம விருது பெற்றோர், பழங்குடி சமூகத்தின் தலைவர்கள் உள்ளிட்டோரும் விருந்தில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.”

“குடியரசு தலைவர் திரு கோவிந்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் நடைபெற்ற இரவு விருந்து நிகழ்ச்சியிலிருந்து மேலும் சில காட்சிகள்.”

************


(Release ID: 1844129) Visitor Counter : 172