பிரதமர் அலுவலகம்

நைனிடாலில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 08 JUL 2022 6:54PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது;

"நைனிடால் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோக சம்பவத்தால் வேதனையடைந்தேன். இந்த சோகமான நேரத்தில்,  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவ மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன: பிரதமர்"

***************



(Release ID: 1840182) Visitor Counter : 114