சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

பாரத் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான வரைவு அறிவிக்கைக்கு திரு நிதின் கட்கரி ஒப்புதல்

Posted On: 24 JUN 2022 2:57PM by PIB Chennai

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரிபாரத் என்சிஏபி எனப்படும் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைவு ஜிஎஸ்ஆர் அறிவிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளார்இந்தியாவில் வாகனங்களுக்கு விபத்து சோதனைகளில் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க இது வகைசெய்யும்.

பாரத்-என்சிஏபி நுகர்வோரை மையமாகக் கொண்ட தளமாகும். வாடிக்கையாளர்கள் தங்கள் நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான கார்களைத் தேர்வுசெய்ய இது உதவும். அதே நேரத்தில் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியையும் இது ஊக்குவிக்கும்.

இந்தியாவை உலகின் முதல்நிலை வாகன தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கத்துடன் நமது வாகனத்துறையை  தற்சார்பு கொண்டதாக மாற்ற பாரத் என்சிஏபி ஒரு முக்கிய கருவியாக இருக்கும் என்று திரு கட்கரி கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836729

***************

(Release ID: 1836729)



(Release ID: 1836748) Visitor Counter : 208