பிரதமர் அலுவலகம்

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வீராங்கனைகளை பிரதமர் சந்தித்தார்

Posted On: 01 JUN 2022 8:33PM by PIB Chennai

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வீராங்கனைகளான நிகத் ஜரீன், மனிஷா மவுன், பர்வீன் ஹுடா ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

பிரதமர் தனது ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது,

“உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை பெருமைப்படுத்திய வீராங்கனைகளான நிகத் ஜரீன், மனிஷா மவுன், பர்வீன் ஹுடா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி. விளையாட்டு மற்றும் அதனைக் கடந்த வாழ்க்கையின் மீதான அவர்களின் ஆர்வம் குறித்த பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினோம். அவர்களின் எதிர்கால முயற்சிக்கு வாழ்த்துகள்”

***************



(Release ID: 1830489) Visitor Counter : 132