பிரதமர் அலுவலகம்

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 25 MAY 2022 2:32PM by PIB Chennai

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து தாம் கவலை அடைந்ததாக கூறியுள்ளார். இந்த சோகமான தருணத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் குறித்து தமது எண்ணம் இருப்பதாக  தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***************



(Release ID: 1828209) Visitor Counter : 158