மத்திய அமைச்சரவை

கரீஃப் பருவத்திற்கான (01.04.2022 முதல் 30.09.2022 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 27 APR 2022 4:52PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய உரத் துறை பரிந்துரைப்படி, கரீஃப் பருவத்தில் (01.04.2022  முதல்  30.09.2022 வரை) பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

கரீஃப் 2022 பருவத்தில் உள்நாட்டு உரங்களுக்கு ஆதரவு அளிப்பது உட்பட ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியமாக ரூ.60,939.23 கோடியை போக்குவரத்து மானியம் வாயிலாகவும், உள்நாட்டு உற்பத்திக்கு கூடுதல் ஆதரவு  மற்றும்  டிஏபி இறக்குமதி வாயிலாகவும் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதன் அடிப்படையில் ஒரு மூட்டை டிஏபி உரத்திற்கு தற்போது வழங்கப்படும் மானியத்தை ரூ.1,650-ஐ ரூ.2,501-ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்துள்ளது.  இது கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மானியத்தை விட 50% அதிகமாகும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820522

***************



(Release ID: 1820622) Visitor Counter : 377