பிரதமர் அலுவலகம்
பாகிஸ்தான் பிரதமராக தேர்வு பெற்றுள்ள திரு மியான் முகமது சாபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
11 APR 2022 11:11PM by PIB Chennai
பாகிஸ்தான் பிரதமராக தேர்வு பெற்றுள்ள திரு மியான் முகமது சாபாஸ் ஷெரீப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத அமைதியையும், நிலைத்தன்மையையும் இந்தியா விரும்புகிறது என்றும், அப்போதுதான் இருநாடுகளும் தங்கள் வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்த முடியும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
“பாகிஸ்தான் பிரதமராக தேர்வு பெற்றுள்ள திரு மியான் முகமது சாபாஸ் ஷெரீப்புக்கு வாழ்த்துக்கள். பிராந்தியத்தில் பயங்கரவாதம் இல்லாத அமைதியையும், நிலைத்தன்மையையும் இந்தியா விரும்புகிறது. அப்போதுதான் இருநாடுகளும் தங்கள் வளர்ச்சி சவால்களில் கவனம் செலுத்தி, நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் நலத்தை உறுதி செய்ய முடியும்”.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1815996)
வருகையாளர் எண்ணிக்கை : 209
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam