சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 177.70 கோடியைக் கடந்தது

प्रविष्टि तिथि: 01 MAR 2022 9:36AM by PIB Chennai

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்துக்கும் அதிகமாக (18,22,513) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 177.70 கோடியைக் (1,77,70,25,914) கடந்தது. 2,04,61,239 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16,864 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,23,24,550ஆக அதிகரித்துள்ளது.

  • தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.59 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,915 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொவிட் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 92,472 ஆக உள்ளது; நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த விகிதம் தற்போது 0.22 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  9,01,647 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 76.83 கோடி கொவிட் பரிசோதனைகள் (76,83,82,993)  செய்யப்பட்டுள்ளன. வாராந்திரத் தொற்று 1.11  சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.77 சதவீதமாக பதிவாகியுள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801977


(रिलीज़ आईडी: 1802012) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Odia , Malayalam