பிரதமர் அலுவலகம்

ராஜஸ்தானின் கோட்டா சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 21 FEB 2022 9:52AM by PIB Chennai

ராஜஸ்தானின் கோட்டா சாலை விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பிரதமரின் அலுவலக டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“ராஜஸ்தானின் கோட்டாவில் ஏற்பட்ட விபத்து மிகவும் துயரமானது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கிக் கொள்ள இறைவன் அவர்களுக்கு மனபலத்தைத் தரட்டும்:

“கோட்டாவில் ஏற்பட்ட சோகமான சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும்: பிரதமர்.”

***



(Release ID: 1800004) Visitor Counter : 160