பிரதமர் அலுவலகம்

உ.பி.யின் குஷிநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 17 FEB 2022 10:02AM by PIB Chennai

உ.பி.யின் குஷிநகர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உள்ளூர் நிர்வாகம் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;

"உத்தரபிரதேச மாநிலம் குஷிநகரில் நடந்த விபத்து இதயத்தை உலுக்குகிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். உள்ளூர் நிர்வாகம்  இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது."

***************



(Release ID: 1798973) Visitor Counter : 168