மத்திய அமைச்சரவை

சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு இந்தியா-ஸ்பெயின் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 JAN 2022 4:29PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சுங்க விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவிக்கு இந்தியா-ஸ்பெயின் இடையே ஒப்பந்தம் செய்து கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பயன்கள்:

சுங்க வரி ஏய்ப்பு குற்றவாளிகளைப் பிடிக்கவும், இது தொடர்பான குற்றங்களைத் தடுக்கவும், புலனாய்வு செய்யவும் தேவையான, ரகசிய தகவல்களை நம்பகமான முறையில் விரைவாகவும், குறைந்த செலவிலும்  பெறுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும்.

இரு நாடுகளின் சுங்கவரி அதிகாரிகளும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான சட்ட நடைமுறைகளை இந்த ஒப்பந்தம் வழங்குவதுடன், சுங்கவரி சட்டங்களை முறையாக செயல்படுத்தவும், சுங்க குற்றங்களை கண்டுபிடித்தல், புலனாய்வு செய்தல் மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கு உதவிகரமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788013

*****



(Release ID: 1788031) Visitor Counter : 255