பிரதமர் அலுவலகம்

ஆந்திரப்பிரதேசத்தில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத்தொகையை அறிவித்தார் பிரதமர்

Posted On: 15 DEC 2021 9:12PM by PIB Chennai

ஆந்திரப்பிரதேசம் மேற்கு கோதாவரியில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து  கருணைத் தொகையை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலம் சுட்டுரையில் கூறியிருப்பதாவது;

“ஆந்திரப்பிரதேசம் மேற்கு கோதாவரியில்  நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகையை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்”.

 -----



(Release ID: 1782240) Visitor Counter : 137