பிரதமர் அலுவலகம்

கீதா ஜெயந்தியையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 DEC 2021 2:05PM by PIB Chennai

கீதா ஜெயந்தியையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதனையொட்டி திரு.மோடி பகவத் கீதை குறித்து தாம் அண்மையில் ஆற்றிய இரண்டு உரைகளைப் பகிர்ந்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது;

இன்று கீதா ஜெயந்தியையொட்டி சமீபத்திய எனது இரண்டு கீதை பற்றிய உரைகளை நான் பகிர்ந்துள்ளேன்.

சுவாமி சித்பவானந்தரின் மின்னணு வடிவ தொடக்க விழாவில் ஆற்றிய உரை.

கீதை குறித்து பல்வேறு அறிஞர்களின் கருத்துக்களுடனான கையெழுத்துப் பிரதிகள் வெளியீடு.

கீதா ஜெயந்தியையொட்டி வாழ்த்துகள்.

வாழ்வின் பல்வேறு பரிமாணங்களுக்கான எதார்த்தமான வழிகாட்டி, கீதையின் போதனைகள் உலகளவில் எதிரொலிப்பதை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது.

***



(Release ID: 1781304) Visitor Counter : 192