பிரதமர் அலுவலகம்

82-வது அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் நவம்பர் 17 அன்று பிரதமர் உரையாற்றுகிறார்

Posted On: 15 NOV 2021 8:34PM by PIB Chennai

82-வது அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் 2021 நவம்பர் 17 அன்று காலை 10 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

இந்திய சட்டமன்றங்களின் தலைமை அமைப்பான அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாடு 2021-ம் ஆண்டில் அதன் நூற்றாண்டை கொண்டாடுகிறது. அனைத்திந்திய சட்டமன்ற தலைவர்கள் மாநாட்டின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக அதன் 82-வது பதிப்பு 2001 நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிம்லாவில் நடைபெறுகிறது.

மக்களவைத் தலைவர், ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.

 ****



(Release ID: 1772139) Visitor Counter : 244