பிரதமர் அலுவலகம்

100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

Posted On: 21 OCT 2021 10:55AM by PIB Chennai

100 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கை கடந்து சாதனை படைக்க பாடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில் :

“இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது, இந்தியாவின் அறிவியல், தொழில் மற்றும் 130 கோடி இந்திய மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை நாம் கண்கூடாக காண்கிறோம்,

100 கோடி தடுப்பூசிகளை கடந்ததற்கு வாழ்த்துக்கள் இந்தியா. இந்த சாதனையைப் படைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. #நூறுகோடிதடுப்பூசி”



(Release ID: 1765375) Visitor Counter : 261