நிலக்கரி அமைச்சகம்

அனல்மின் நிலையங்களுக்கு இரண்டு மில்லியன் டன்களுக்கு மேற்பட்ட நிலக்கரி விநியோகம்: மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தகவல்

Posted On: 13 OCT 2021 3:52PM by PIB Chennai

அனல் மின் நிலையங்களுக்கு அனைத்து இடங்களிலிருந்தும் நிலக்கரி விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார்.  

சுட்டுரையில் அவர் விடுத்துள்ள தகவலில், நிலக்கரி இந்தியா நிறுவனம் உட்பட  அனைத்து இடங்களிலிருந்தும் அனல்மின் நிலையங்களுக்கு இரண்டு மில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று பதிவு செய்யப்பட்டது.

அனல் மின் நிலையங்களில் போதிய கையிருப்பை உறுதி செய்ய நிலக்கரி விநியோகம் மேலும் அதிகரிக்கப்படும் என்று திரு பிரகலாத் ஜோஷி  தெரிவித்துள்ளார்.

********



(Release ID: 1763717) Visitor Counter : 192