பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேச சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க ஒப்புதல்
Posted On:
07 OCT 2021 11:35AM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி அளிக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்
இதுகுறித்த டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கியில் ஏற்பட்ட சாலை விபத்து வருத்தத்தை அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் குணமடைய பிராத்தனைகள். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50000-மும் வழங்கப்படுமென பிரதமர் @narendramodi", கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
***
ஆன/ஸ்ரீ
(Release ID: 1761699)
Visitor Counter : 172
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam