பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தஜிகிஸ்தானில் துஷான்பே நகரில் எஸ்சிஓ அமைப்பு தலைவர்களின் 21வது கூட்டம்

Posted On: 15 SEP 2021 1:00PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ), அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 21வது கூட்டம், தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில், செப்டம்பர் 17ம் தேதி நேரடியாகவும், காணொலி முறையிலும் நடக்கிறது.

இந்த கூட்டத்துக்கு தஜிகிஸ்தான் அதிபர் மேதகு எமோமலி ரகுமான் தலைமை தாங்குகிறார்இதில் இந்திய குழுவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கி, கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். துஷான்பே நகரில் நடைபெறும் கூட்டத்தில், இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்பார்.

எஸ்சிஓ உச்சிமாநாட்டில், எஸ்சிஓ அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள், பார்வையாளர்களாக இருக்கும் நாடுகள், எஸ்சிஓ அமைப்பின் பொதுச் செயலாளர், எஸ்சிஓ பிராந்திய தீவிரவாத தடுப்பு அமைப்பின் இயக்குனர், துர்க்மெனிஸ்தான் அதிபர் மற்றும் இதர விருந்தினர்கள்  கலந்து கொள்கின்றனர்.

இது நேரடியாகவும், காணொலி முறையிலும் நடைபெறும் முதல் எஸ்சிஓ உச்சிமாநாடு மற்றும் எஸ்சிஓ அமைப்பின் முழு அளவிலான உறுப்பினராக இந்தியா பங்கேற்கும் 4வது உச்சிமாநாடுஎஸ்சிஓ அமைப்பின் 20வது ஆண்டு விழாவில், இந்த கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உச்சிமாநாட்டில்கடந்த 20 ஆண்டுகளில், எஸ்சிஓ அமைப்பின் செயல்பாடுகள், எதிர்கால ஒத்துழைப்பின் நிலை மற்றும் வாய்ப்புகளை தலைவர்கள் ஆய்வு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்திய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

-----

 


(Release ID: 1755447)