உள்துறை அமைச்சகம்

தீயணைப்பு, ஊர்க்காவல், சமூக பாதுகாப்பு படையினருக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 14 AUG 2021 12:32PM by PIB Chennai

ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீயணைப்பு, ஊர்க்காவல் மற்றும் சமூக பாதுகாப்பு படையினருக்கு குடியரசுத் தலைவரின் வீரதீர பதக்கங்கள், சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள், வீரதீர பதக்கங்கள் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

2021-ம் வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு, தீயணைப்பு சேவை விருதுகளுக்கு 86 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேருக்கு தீயணைப்பு வீரதீர பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.

சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்கள் 10 நபர்களுக்கும், சிறப்பான சேவைக்கான தீயணைப்பு பதக்கங்கள் 50 பேருக்கும் வழங்கப்படுகின்றன.

மேலும், 55 நபர்களுக்கு ஊர்க்காவல் மற்றும் சமூக பாதுகாப்பு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இவர்களில் ஐந்து பேருக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் ஊர்க்காவல் படை மற்றும் சமூக பாதுகாப்பு பதக்கங்களும், 50 பேருக்கு சிறப்பான பணிக்கான சமூக பாதுகாப்பு பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745711

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1745819) வருகையாளர் எண்ணிக்கை : 294
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , Kannada , Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Odia