பிரதமர் அலுவலகம்

கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 11 AUG 2021 9:54PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது;

கின்னாரில் ஏற்பட்ட நிலச்சரிவு மிகவும் சோகமான ஒன்று. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் துணை நிற்கின்றன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளவர்களை மீட்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”.

***



(Release ID: 1745055) Visitor Counter : 149