பிரதமர் அலுவலகம்

மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வருடன் பிரதமர் பேச்சு

Posted On: 04 AUG 2021 1:27PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் அணைகளிலிருந்து தண்ணீர் வடிந்ததால் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் திருமிகு மம்தா பானர்ஜியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியுள்ளார். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில், அணைகளிலிருந்து தண்ணீர் வடிந்ததால் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் திருமிகு மம்தா பானர்ஜியுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு, இயன்ற அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்களது பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக பிரதமர் திரு மோடி பிரார்த்தனை செய்கிறார்”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

***

 



(Release ID: 1742251) Visitor Counter : 235