பிரதமர் அலுவலகம்

ஆகஸ்ட் 3 ஆம் தேதி குஜராத்தில் பிரமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் உரையாடல்

Posted On: 01 AUG 2021 9:11PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத்தில் பிரமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டப் பயனாளிகளுடன் 2021 ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி மூலம் உரையாடுகிறார்.  இத்திட்டம் குறித்து மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக. பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய நிகழ்வு இந்த மாநிலத்தில் துவக்கப்படுகிறது.

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் பற்றி

கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பினை குறைப்பதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம், பிரதமரால் துவக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு நலத்திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தினால் பலனடையும் அனைத்துப் பயனாளிகளுக்கும் நபருக்கு ஐந்து கிலோ வீதம் கூடுதல் உணவு தானியம் வழங்கப்படுகிறது.

பிரதமரின் காணொலி உரையாடல் நிகழ்ச்சியில், குஜராத் மாநில முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொள்கின்றனர்.

 

******



(Release ID: 1741386) Visitor Counter : 210